பஹல்காமில் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்: ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். அவர்கள் பயங்கரவாத தளங்களை மட்டுமே தாக்கியுள்ளனர். நிலைமையைக் கவனித்து வருகிறோம். காஷ்மீர் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.



