வீரவநல்லூர்: பத்தமடை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இலவச சைக்கிள் வழங்கும் விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை அனிதா கோமுகி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பேரூராட்சி தலைவி ஆபிதா ஜமால்தீன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். விழாவில் 93 மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சி துணைத் தலைவர் வசந்தாள் கரிசூழ்ந்தான், திமுக நகர இளைஞரணி ஜமால்தீன், வர்த்தக அணி சேக், பேரூராட்சி கவுன்சிலர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுபோன்று சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் பரமசிவன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக திமுக ஒன்றிய செயலாளர் முத்துபாண்டி பிரபு கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். விழாவில் 272 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இதில் நகர செயலாளர் மனிஷா செல்வராஜ், பேரூராட்சி துணைத்தலைவர் பால்மாரி, மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.