Friday, March 29, 2024
Home » கடல் கடந்து காதல் சீனப் பெண்ணை மணந்த கடலூர் வாலிபர்

கடல் கடந்து காதல் சீனப் பெண்ணை மணந்த கடலூர் வாலிபர்

by Karthik Yash

கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர். சீனாவுடன் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கும் சீன நாட்டை சேர்ந்த யீஜியோ என்ற பெண்ணுக்கும் சமூக வலைதளம்(வி.சேட்) மூலம் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் கடலூரில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு குடும்பத்துடன் யீஜியோ, கடலூர் வந்தார். பின்னர் நேற்று கடலூர் முதுநகரில் இவர்கள் திருமணம் நடந்தது. மணமகன் பாலச்சந்தர் தமிழ் கலாசாரத்தின் படி பட்டு வேஷ்டி, சட்டையிலும், சீன மணமகள் யீஜியோ பட்டு சேலை, தங்க அணிகலன்களுடன் இருந்தனர். இருவரும் மணவறையில் அமர யாக குண்டம் அமைத்து மங்கல இசை முழங்க இந்து முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

9 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi