தருமபுரி: வாச்சாத்தி மலை கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி 1992-ல் சோதனை நடந்தது. 1992-ம் ஆண்டு ஜூன் 20-ல் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையினர் இணைந்து சோதனை நடத்தினர். சோதனையின்போது இளம்பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு 215 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். வழக்கு தொடர்பாக வாச்சாத்தி மலை கிராமத்துக்கு நீதிபதி பி.வேல்முருகன் நேரில் சென்றும் ஆய்வு செய்தார்.