0
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.