ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி உலக நாடுகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
* பதற்றம் விரைவில் தணியும் – டிரம்ப்
பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிரம்ப், “இது ஒரு அவமானம். இந்தியா – பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இந்த பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.
* கவலை அளிக்கிறது – ரஷ்யா வேதனை
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ரஷ்ய கருத்து தெரிவித்துள்ளது. ரஷ்ய வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜகரோ, “இந்தியா – பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் தீவிரமடைந்து வருவது பற்றி ரஷ்யா கவலை அடைந்துள்ளது. தீவிரவாத செயல்களை ரஷ்யா கடுமையாக எதிர்க்கிறது. நிலைமை மேலும் மோசமடைவதை தடுக்க இந்தியா – பாகிஸ்தான் இருநாடுகளும் நிதானத்தை கடைப்பிடித்து அமைதி முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.
* பதற்றத்தை குறைக்க உதவ தயார் – பிரிட்டன்
இதுகுறித்து இங்கிலாந்து வௌியுறவு செயலாளர் டேவிட் லாமி, “இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கு இங்கிலாந்து நண்பர். இருநாடுகளுக்கும இடையே பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தை தணிக்க இங்கிலாந்து உதவ தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
* இந்தியா – பாக். நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் – சீனா வேண்டுகோள்
சீன வௌியுறவு அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிக்கையில், “ இந்தியா, பாகிஸ்தான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து சீனா கவலை கொள்கிறது. இருநாடுகளும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளது.