காஞ்சிபுரம்: கோவில் நகரம், பட்டு நகரம், சுற்றுலா நகரம் என அறியப்படும் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் நாள்தோறும் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும், பட்டுச்சேலை வாங்க வரும் வாடிக்கையாளர்களும் என பல்லாயிர கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் இயற்கை உபாதைகளை கழிக்க உரிய இடமில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் கட்டண கழிப்பிடங்கள் இருந்தாலும் முக்கிய பகுதிகளில் இல்லாததால் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனை அறிந்து பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் இந்திய ரோட்டரி சங்கம் சார்பில் காஞ்சிபுரம் நகரில் மக்கள் அதிகம் கூடும் காந்தி சாலை, காமராஜர் சாலை ஆகிய இரு இடங்களில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நவீன முறையில் கண்டெய்னரில் செய்யப்பட்ட ரோஸ் நிற சுகாதார கழிவறைகள் தயார் செய்யப்பட்டு அமைக்கப்பட்டு உள்ளது.