தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊனைமாஞ்சேரியில் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய கூடம்: பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை

Advertisement

கூடுவாஞ்சேரி: ஊனைமாஞ்சேரியில் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு 7 ஆண்டுகளாக திறக்கப்படாத சமுதாய கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காரணைப்புதுச்சேரி மற்றும் ஊனைமாஞ்சேரி ஆகிய ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் காரணைப்புதுச்சேரியில் நடந்தது.

இதில், ஊராட்சி மன்ற தலைவர்கள் காரணைப்புதுச்சேரி நளினிஜெகன், ஊனைமாஞ்சேரி மகேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், காட்டாங்குளத்தூர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன், வண்டலூர் தாசில்தார் புஷ்பலதா ஆகியோர் கலந்துகொண்டு ஏராளமான பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

அப்போது, ஊனைமாஞ்சேரி பொதுமக்கள் திரண்டு வந்து கடந்த 2016-2017ம் ஆண்டு செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ நிதியில் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், 7ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை. எனவே மேற்படி சமுதாய கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தினர்.

Advertisement

Related News