Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதாக மாணவர்கள் புகார்

துரைப்பாக்கம்: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் இளநிலை மருத்துவம் முதலாமாண்டு படிக்கும் மாணவன் ஒருவர், டெல்லியில் உள்ள ராகிங் தடுப்பு பிரிவில் கடந்த 26ம் தேதி ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதில், ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த சீனியர் மாணவர்கள், தங்களை அவர்களுடைய `ரெக்கார்டு’ நோட்டுகளை எழுத வைத்தல், வகுப்பறைக்கு செல்ல விடாமல் தடுத்தல் உள்ளிட்ட ராகிங் செயல்களில் ஈடுபடுவதாக கூறியிருந்தார்கள். இதுதொடர்பாக ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என டெல்லியில் உள்ள ராகிங் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அரவிந்தன், ராகிங் சம்பவம் தொடர்பாக சீனியர் மாணவர்களிடம் விசாரணை நடத்தி அதற்கான அறிக்கையை அனுப்ப முடிவு செய்தார். ஆனால், இந்த விவகாரத்தில் காவல் துறை உதவியுடன் விசாரணையை முன்னெடுக்குமாறு ராகிங் தடுப்பு பிரிவு அறிவுறுத்தியது. அதனை தொடர்ந்து, அத்தகைய விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு, ராகிங் தடுப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இதில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.