Sunday, July 20, 2025
Home செய்திகள்Banner News தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,000 கன அடியில் இருந்து 57,000 கன அடியாக அதிகரிப்பு

தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,000 கன அடியில் இருந்து 57,000 கன அடியாக அதிகரிப்பு

by Arun Kumar


தருமபுரி: நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,000 கன அடியில் இருந்து 57,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பால் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. பரிசல் சவாரிக்கும், அருவியில் குளிக்கவும் 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது .

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்​நாடகா மாநில காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்​து​வரும் கனமழை​யால் கர்​நாடக மாநிலத்​தில் உள்ள கபினி, கிருஷ்ண​ராஜ சாகர் அணை​கள் வேக​மாக நிரம்பி வரு​கின்​றன. அணை​களின் பாது​காப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்​றில் திறந்து விடப்​படு​கிறது.

இதனால், தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நீர்​வரத்து படிப்​படி​யாக அதி​கரித்து வரு​கிறது. நேற்று முன்​தினம் மாலை​ 16,000 ஆயிரம் கனஅடி​யாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 32,000 கனஅடி​யாக​வும், மாலையில் 50,000 கனஅடி​யாக​வும் உயர்ந்​தது. இதனால் ஒகேனக்​கல் பிர​தான அருவிக்கு செல்​லும் நடை​பாதை தண்​ணீரில் மூழ்​கி​யுள்​ளது. மேலும், பிர​தான அருவி உள்​ளிட்ட இடங்​களில் வெள்​ளம் ஆர்ப்​பரித்து ஓடு​கிறது.

வெள்​ளப்​பெருக்கு காரண​மாக ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் பரிசல் இயக்க தடை விதித்து மாவட்ட ஆட்​சி​யர் சதீஷ் உத்​தர​விட்​டுள்​ளார். மேலும், ஆற்​றி​லும், அருவி​களி​லும் குளிக்க 3 நாட்​களுக்கு முன்பு அறிவிக்​கப்​பட்ட தடை​யும் தொடர்ந்து அமலில் உள்​ளது. மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் காலை விநாடிக்கு 7,815 கன அடி​யாக​வும், மாலை 13,332 கனஅடி​யாக​வும் இருந்த நீர்​வரத்து நேற்று காலை 18,290 கனஅடி​யாக​வும், மாலை 37,263 கனஅடி​யாக​வும் அதி​கரித்​தது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi