சென்னை: ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி இன்று அரசுபோக்குவரத்து கழகம் சார்பில் சிறப்புபேருந்துகள் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இன்றும் இயக்கப்படுகிறது. கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.