Wednesday, July 9, 2025
Home செய்திகள் முதியோர் காப்பக பலி 6 ஆக உயர்வு

முதியோர் காப்பக பலி 6 ஆக உயர்வு

by Francis

நெல்லை: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரம் அடுத்த கீழபட்டாகுறிச்சியில் செயல்பட்ட அன்னை முதியோர் காப்பகத்தில் கடந்த 11ம் தேதி உணவு சாப்பிட்டவர்களில் சங்கர்கணேஷ் (48), முருகம்மாள் (55), அம்பிகா (40) ஆகிய 3 பேர் கடந்த 12ம் தேதியும், தென்காசி அரசு மருத்துவமனையில் தனலட்சுமி (70) என்பவர் கடந்த 13ம் தேதியும் இறந்தனர். மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட 12 பேரில், கடந்த 17ம் தேதி இடைகால் பகுதியைச் சேர்ந்த முப்பிடாதி (50) உயிரிழந்தார்.

8 பேர் உடல் நிலை தேறிய நிலையில் 3 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, மூப்பன்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் (74) நேற்று இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஏற்கனவே போலீசார் அந்த காப்பகத்தை சீல் வைத்து, காப்பக உரிமையாளரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi