அண்ணாநகர்: அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த அஜித் (27), நேற்று முன்தினம் இவர் கீழ்ப்பாக்கம் கல்லறை அருகே சென்றபோது, இவரை வழிமறித்த மர்ம நபர், சரமாரி தாக்கி ரூ.2000த்தை பறித்து சென்றார். புகாரின்பேரில், டி.பி.சத்திரம் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அமைந்தகரை ஷெனாய் நகரில், போலீசார் ரோந்து சென்றபோது, போலீசாரை பார்த்ததும், வாலிபர் ஒருவார் ஓட்டம் பிடித்துள்ளார். அவர், மதில்சுவர் மீது ஏறி குதித்தபோது கால் எலும்பு முறிந்தது. அவரைமீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் அவர், பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ரோகித் (எ) ரோகித்ராஜ் (34) என்பதும், அஜித்தை தாக்கி பணம் பறித்தவர் என்பதும் தெரிந்தது. மேலும், அவர்மீது, 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.