சென்னை: நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார். தமிழ்நாட்டின் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய பிரதமரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!!
0