போனில் தகவல் தெரிவித்துவிட்டு காதலி வீட்டில் தூக்கிட்டு இன்ஜினியர் தற்கொலை
2023-03-19@ 00:57:25

வேளச்சேரி: புதுப்பேட்டை டிரைவர் தெருவை சேர்ந்தவர் மேலை நாசர். இவரது மனைவி ஷகிலா. இவர்களது மகன் மொய்தீன் அமீர் (23), சாப்ட்வேர் இன்ஜினியர். இவர், பெரும்பாக்கம் 1வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பாரதி என்பவரை காதலித்து வந்துள்ளார். பாரதி வசித்துவந்த வீட்டுக்கு மொய்தீன் அமீர் அடிக்கடி சென்று வந்ததுடன், பலதடவை அந்த வீட்டில் தங்கியதாக கூறப்படுகிறது. இதனால், அவரிடமும் வீட்டின் ஒரு சாவி இருந்துள்ளது. பாரதி வேலை விஷயமாக கடந்த 15ம் தேதி டெல்லிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், மொய்தீன் அமீர் நீண்ட நேரம் செல்போனில் பேசுவதை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால், கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய அவர், தனது காதலி வீட்டுக்கு சென்று தங்கியதாக தெரிகிறது.
நேற்று மதியம் மொய்தீன் அமீர், தனது காதலியை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘‘நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். இதனால் பதற்றம் அடைந்த பாரதி உடனடியாக தனது தம்பி அரிகரனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்து தனது வீட்டுக்கு போய் பார்க்கும்படி கூறியுள்ளார். இதன்படி அரிகரன் அங்கு சென்று பார்த்தபோது, மொய்தீன் அமீர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தகவலறிந்த பெரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மொய்தீன் அமீர் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
அமைச்சர்.பி.மூர்த்தி அவர்கள் தலைமையில் துணை பதிவுத்துறை தலைவர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.!
உடனடியாக சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் மொபைலில் வந்த லிங்க்கை தொட்டார் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் இழந்தார்
தகுதியில்லாமல், மாற்று முறை மருத்துவத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னையில் தொடர் மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது
ரூ.32.62 கோடி மதிப்பில் விக்டோரியா பொது அரங்கத்தினை மறுசீரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினர் அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின்
திராவிட மாடல் என்ற கருத்தியலுக்கு முழுமையான எடுத்துக்காட்டாக நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!