மின்கசிவு காரணமாக பிரபல துணிக்கடையில் தீ
2023-03-19@ 00:56:00

தாம்பரம்: குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணைக்கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உள்ள சிக்னல் அருகே பிரபல துணிக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில், நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில், இந்த துணிக்கடையின் மேல் தளத்தில் இருந்து நேற்று காலை கரும் புகை வந்துள்ளது.
இதனைகண்ட பொதுமக்கள் இதுகுறித்து குரோம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் மற்றும் தாம்பரம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கடையின் மாடியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். தீயணைப்பு துறையினரின் உடனடி நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில், கடையின் மேல் தளத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த துணிகள் எரிந்து நாசமானது.
மேலும் செய்திகள்
நிதிநிலை அறிக்கையில் ஊக்குவிக்கும் திட்டங்கள் தமிழ்நாட்டில் வேளாண்மை தொழில் புத்தாக்கம் பெறும்: தலைவர்கள் வரவேற்பு
ரூ.2.13 கோடி செலவில் புதுப்பொலிவு பெறும் ராயபுரம் மாடிப்பூங்கா: விரைவில் திறக்க ஏற்பாடு
விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சர்வதேச தரச்சான்று
கிண்டி மேம்பாலத்தில் விபத்து லாரியிலிருந்து டீசல் கசிந்து சாலையில் வழிந்தோடியது
மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு
போரூர் ஏரியில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!