ஜேபி நட்டா வீடு முன் மகளிர் காங். முற்றுகை
2023-03-19@ 00:36:43

புதுடெல்லி: ராகுல்காந்தியை விமர்சனம் செய்த பா.ஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா வீட்டு முன்பு மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். லண்டன் சென்றிருந்த ராகுல்காந்தி இந்திய ஜனநாயகம் குறித்து கருத்து கூறியிருந்தார். இதனை பாஜ சர்ச்சையாக்கி வருகிறது. தனது கருத்துக்கு ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜ வலியுறுத்தி வருகிறது. பாஜ தலைவர் ஜேபி நட்டா வெளிநாட்டு சக்திகளுடன் ராகுல் இணைந்து செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் டெல்லியில் உள்ள பாஜ தலைவர் நட்டா வீட்டின் முன் போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லி பிரதேச மகளிர் காங்கிரசை சேர்ந்த ஏராளமானவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 15 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் செய்திகள்
தீவிரவாத வழக்குகள் உள்பட இம்ரான் கானுக்கு 3 வழக்குகளில் ஜாமீன்: லாகூர் உயர்நீதிமன்றம் வழங்கியது
பஞ்சாப்பில் போலீசால் தேடப்படும் அம்ரித்பால்சிங் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: பல்வேறு படங்களை வெளியிட்டு தேடுதல் வேட்டை
ஒன்றிய அரசுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சமாதானம்
3வது முறையாக விசாரணைக்கு ஆஜர்கவிதாவின் செல்போன்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பு
மக்களவையில் விவாதமின்றி துணைமானிய கோரிக்கை நிறைவேற்றம்
புதிதாக 699 பேருக்கு கொரோனா: மேலும் 2 பேர் உயிரிழப்பு
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!