அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியா ? ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்..!
2023-03-18@ 20:31:33

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பரவிய தகவலுக்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார். அக்கட்சியில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வரும் 26-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும், நாளையும் நடக்கிறது. இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பில் விருப்ப மனு தாக்கல் செய்ய இருப்பதாக செய்தி வெளியானது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அதிமுகவின் நிறுவனரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட, கழக நிரந்தரப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட சட்டதிட்ட விதிகளுக்கு முற்றிலும் முரணாக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அட்டவணை சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை (19-03-2023 – ஞாயிற்றுக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில், கழகத் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையில், கழக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் அவர்கள் சார்பில் பொதுச் செயலாளர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்யப்படுவதாக ஊடகங்களில் தவறான செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. இது முற்றிலும் உண்மைக்கு மாறானது. என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய ஓபிஎஸ் வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது
திமுக மாணவர் அணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு: மாணவர் அணி செயலாளர் எழிலரசன் அறிவிப்பு
பெண்களுக்கான பொற்காலம் ...இலவச பேருந்து, மாதம் ரூ.1000 உரிமைத் தொகை, சிறப்பு புத்தொழில் இயக்கம் : பட்ஜெட்டில் அசத்தல்!!
செப்.15ல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடக்கம்... தமிழக பட்ஜெட்டில் A டூ Z அசத்தல் அறிவிப்புகள்!!
அண்ணாசாலையில் மேம்பாலம்.. தீவுத்திடலில் திறந்தவெளி தியேட்டர்..: தமிழக பட்ஜெட்டில் சென்னைக்கான அசத்தல் அறிவிப்புகள்!!
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!