ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபடுவோம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
2023-02-09@ 16:50:21

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபட உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாலவாக்கம் கடற்கரை அருகே கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பேசிய அவர், இலங்கையில் பெயரளவில் மட்டுமே உள்ள 13வது சட்டத்திருத்தம் விவகாரம் தொடர்பாக பேச இலங்கை செல்ல உள்ளதாக தெரிவித்தார். இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் 111 படகுகளை மீட்பது குறித்து அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சருடன் ஒன்றிய இணை அமைச்சர் முருகன் பேச உள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கை பயணத்தை முடித்துவிட்டு திரும்பியதும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபட உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தமக்கு பதில் மூத்த பாஜக தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் பங்கேற்பார் எனவும் அண்ணாமலை தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பெரும் களேபரங்களுக்கு நடுவே அதிமுகவின் தென்னரசு, இரட்டை சிலை சின்னத்தில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இன்று ஈரோட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறுகிறது.
மேலும் செய்திகள்
பொதுப்பணித்துறையின் திட்டப் பணிகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி முதல் ஏப். 6 வரை போக்குவரத்து மாற்றம்..!
மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்: சென்னை காவல்துறை தகவல்
சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்!
ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!
மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்