அனுமதியின்றி அதிமுகவினர் கூட்டம்: ஈரோடு மண்டபத்துக்கு சீல்
2023-02-09@ 15:37:33

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய இருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்ற அதிகாரிகளை கண்டதும், அவர்களை கண்டித்து அதிமுகவினர் கோஷம் எழுப்பினர். இதை அடுத்து பறக்கும்படை அதிகாரிகள் விசாரித்ததில் உரிய அனுமதியின்றி அங்கு அதிமுக தேர்தல் அலுவலகம் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.
இதே போல் கடந்த 31ம் தேதியும், எவ்வித அனுமதியும் இன்றி இதே மண்டபத்தில் அதிமுகவினர் கூடியதாக கிடைக்க பெற்ற தகவலின் பேரில் பறக்கும் படை அதிகாரிகள் அங்கு சென்று உரிய அனுமதி பெற்று தேர்தல் பணிமனை நடத்துமாறு அறிவுறுத்தினர். மேலும் அது குறித்து கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அதே மண்டபத்தில் அதிமுகவினர் அனுமதியின்றி கூடியதை அடுத்து மண்டபத்துக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் இன்று அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
தென் இந்தியாவில் முதல் முறையாக சங்கரன்கோவில் அருகே 120 அடி உயர உலக அமைதி கோபுரத்தில் புதியதாக புத்தர் சிலைகள் அமைப்பு: புத்த துறவிகள் பங்கேற்பு
தமராக்கி மஞ்சுவிரட்டு, ஆவியூர் ஜல்லிக்கட்டில் திமிலை உயர்த்தி திமிறிய காளைகளை தீரத்துடன் அடக்கிய மாடுபிடி வீரர்கள்
திருவாரூர் கோயிலில் ஏப். 1ல் ஆழித்தேரோட்டம்: 5 தேர்களுக்கு சீலைகள் பொருத்தும் பணி தீவிரம்
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
கொளுத்தும் வெயில் தாக்கத்திலிருந்து ஆடு, மாடுகளை பாதுகாக்க அசத்தல் ‘டிப்ஸ்’: விவசாயிகளுக்கு கால்நடைத்துறை அட்வைஸ்
அலங்காநல்லூர் அருகே பெரியாறு கால்வாய் பாலம் ‘டமால்’: இடிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கு அவதி
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்