திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத் துறை கட்டிடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?.. எதிர்பார்ப்பில் மக்கள்
2023-02-09@ 15:24:15

திருவள்ளூர்: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு 26 ஆண்டுகள் ஆகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், தொழிலாளர் நலத்துறை மற்றும் அதைச் சார்ந்த அலுவலகமான தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகம், உதவி ஆய்வாளர் (முத்திரை மற்றும் எடையளவு), துணை ஆய்வாளர் அலுவலகம் ஆகியவைகள் திருவள்ளூர் ரயில்வே நிலையம் அருகே பெரியகுப்பத்தில் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம் (அமைப்பு சாரா நலவாரியங்கள்), பெரியகுப்பம், சித்தி விநாயகர் கோயில் தெருவில் செயல்பட்டு வருகிறது.
இதனால் வாடகை மூலம் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் தொகை அரசுக்கு செலவாகிறது. இந்த அலுவலகங்கள் தனித்தனியாக செயல்பட்டு வருவதால் பணிக்கு வருவோர்களின் விவரங்களையும் அறிந்துகொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. இந்த அலுவலகங்கள் தனித்தனியாக உள்ளதால் நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள் அலுவலக இருப்பிடத்தை கண்டறிந்து வர தாமதம் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில்கொண்டு திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகம் அமைக்க ரூ.2 கோடியே 40 லட்சத்து 15 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2020ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு கடந்த 2021 ம் ஆண்டு பணிகள் நிறைவு பெற்றன.
தற்போது ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகம் அனைத்து வசதிகளுடன் தயாராகி ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் முள்புதர்கள் மண்டிக் கிடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் கேட்டபோது, ‘’தமிழக அரசு ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகம் அமைக்க ரூ.2கோடியே 40 லட்சத்து 15 ஆயிரம் ஒதுக்கீடு செய்து, பொதுப்பணித் துறை (கட்டுமானம்) சார்பில் ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பதற்கு தயார் நிலையில் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதன்பேரில் ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறைக்கான பிரிவு அலுவலகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் அடுத்த மாதம் திறந்து வைக்கப்படும்’ என்றார்.
மேலும் செய்திகள்
பொதுப்பணித்துறையின் திட்டப் பணிகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி முதல் ஏப். 6 வரை போக்குவரத்து மாற்றம்..!
மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்: சென்னை காவல்துறை தகவல்
சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்!
ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!
மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்