போதையில் தகராறு: நண்பனுக்கு கத்திக்குத்து
2023-02-09@ 01:25:21

தாம்பரம்: தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் ஆதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மாலை இருவர் குடிபோதையில் பேசிக்கொண்டு இருந்தனர். திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. ஆத்திரமடைந்த ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மற்ெறாருவரை குத்தி விட்டு தப்பி ஓடினார். இதை பார்த்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த சேலையூர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், கத்தியால் குத்தப்பட்டவர் ராஜகீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜன் (25), மற்றொருவர் நண்பர் வினோத்குமார் (32) என்பதும், போதையில் வினோத்குமார், ராஜனை கத்தியால் குத்தியதும் தெரியவந்தது. கொலை வழக்கு மற்றும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் வினோத்குமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவான வினோத்குமாரை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது-₹4.50 லட்சம் மதிப்பிலான 11 வாகனங்கள் பறிமுதல்
குலசேகரம், திருவட்டார் பகுதிகளில் போஸ்டர் ஒட்டி தேடிய பிரபல ரப்பர் ஷீட் திருடன் கூட்டாளிகளுடன் கைது-1,150 ரப்பர் ஷீட், 300 கிலோ பாத்திரங்கள் பறிமுதல்
கெங்கவல்லி அருகே வனப்பகுதியில் உடும்பு வேட்டையாடியவர் கைது-சிசிடிவி கேமரா மூலம் சிக்கினார்
செஞ்சி அருகே தகாத உறவால் கணவரை கொலை செய்ய முயற்சி-மனைவி, காதலன் கைது
புதுமாப்பிளை கொலை கோர்ட்டில் 2 பேர் சரண்
கோவை நீதிமன்றம் வளாகத்தில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்: வழக்கறிஞர்கள் குவிந்ததால் பரபரப்பு
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!