ஈரோடு கிழக்கு தொகுதியில் சூடுபிடித்த தேர்தல் பிரச்சாரம்!: இஸ்திரி, தேநீர் போட்டுக் கொடுத்து அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய ஆர்.பி.உதயகுமார்..!!
2023-02-08@ 15:42:04

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் பரிசீலனை முடிவடைந்துள்ள நிலையில், தேர்தல் பரப்புரையும் சூடுபிடித்துள்ளது. அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கச்சேரி சாலை, காரி வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது இஸ்திரி போட்டும், தேநீர் கடையில் இருந்தவர்களுக்கு தேநீர் போட்டு கொடுத்தும் ஆதரவு திரட்டினார்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து கைத்தறி துறை அமைச்சர் காந்தி, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் நேற்று பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டனர். 53வது வார்டில் நடந்தே சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காந்தி. அப்போது பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதேபோன்று வீரப்பன்சத்திரம் பகுதியில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பரப்புரை மேற்கொண்டார். அவருக்கும் ஏராளமான பெண்கள் வரவேற்பு அளித்தனர். வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாள் என்பதால் அங்கு பிற்பகலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது.
மேலும் செய்திகள்
மாநில அளவிலான சிலம்ப போட்டியில் மாணவிகள் சாதனை: திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அசத்தல்
நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கம்
ஏப்ரல் 1 முதல் அமல் கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர் கட்டணம் நிர்ணயம்
ஊட்டி ஏரியில் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் கொட்டும் மழையிலும் தாவரவியல் பூங்கா ஊழியர்கள் 3வது நாளாக போராட்டம்
தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி