ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்., அதிமுக, தேமுதிக வேட்பாளர் உள்பட 80 வேட்புமனுக்கள் ஏற்பு..!!
2023-02-08@ 15:21:57

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் உட்பட 80 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31ம் தேதி தொடங்கி நேற்று முடிவுக்கு வந்தது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உட்பட மொத்தம் 96 வேட்புமனு தாக்கல் செய்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. பிரதான கட்சிகளான திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குக்கர் சின்னம் கிடைக்காததால் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த அமமுக வேட்பாளர் சிவபிரசாத் வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளராக மனுத்தாக்கல் செய்து பின்னர் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் வேட்புமனுவை கட்சி சார்பில் முன் மொழியாததால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மாநில அளவிலான சிலம்ப போட்டியில் மாணவிகள் சாதனை: திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அசத்தல்
நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கம்
ஏப்ரல் 1 முதல் அமல் கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர் கட்டணம் நிர்ணயம்
ஊட்டி ஏரியில் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் கொட்டும் மழையிலும் தாவரவியல் பூங்கா ஊழியர்கள் 3வது நாளாக போராட்டம்
தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி