உத்திரமேரூர் களியாம்பூண்டி அருகே “நான் வந்துட்டேன்’’... பிறந்த குழந்தை பேசியதா?.. வதந்தியால் திடீர் பரபரப்பு
2023-02-08@ 15:18:50

உத்திரமேரூர்: ‘’நான் வந்துட்டேன்’’ என்று குழந்தை பேசியதாக செய்தி வெளியாகி பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. உத்திரமேரூர் அருகே அழிசூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (21). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரேவதிக்கு சில நாட்களுக்கு பிரசவ வலி கடுமையாக ஏற்பட்டதால் அவரை உடனடியாக உத்திரமேரூர் அருகே உள்ள களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ரேவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதன்பிறகு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ரேவதி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நான் வந்துட்டேன் என்று குழந்தையின் சத்தம் கேட்டதால் ரேவதி திடுக்கிட்டு எழுந்துள்ளார். அப்போதும் குழந்தை நான் வந்துட்டேன் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் பதற்றம் அடைந்த ரேவதி, இதுபற்றி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து நர்ஸ் உள்பட அனைவரும் வந்து பார்த்தபோதும் குழந்தை நான் வந்துட்டேன் என்று குழந்தை கூறியதாக தெரிகிறது. இதனால் ஊழியர்கள் உள்பட அனைவரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.
இதனிடையே அந்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் கிராம மக்கள் திரண்டுவந்து பேசியதாக கூறிய அதிசய குழந்தையை பார்த்து சென்றனர். இதன்காரணமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. தற்போது இந்த செய்தி சமூகவலை தள பக்கங்களிலும் வைரலாகி வருகிறது. இவற்றை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கம்
ஏப்ரல் 1 முதல் அமல் கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர் கட்டணம் நிர்ணயம்
ஊட்டி ஏரியில் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் கொட்டும் மழையிலும் தாவரவியல் பூங்கா ஊழியர்கள் 3வது நாளாக போராட்டம்
தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ்
திருத்துறைப்பூண்டி மனநல காப்பகத்தை சுகாதார துறை அதிகாரி ஆய்வு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி