பள்ளிப்பட்டு 13வது வார்டில் பிரதான சாலையில் கழிவுநீர் தேக்கம்: நோய்தொற்று பரவும் அபாயம்
2023-02-08@ 15:15:07

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டின் பிரதான சாலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியே சென்று வரும் குழந்தைகள் உள்பட அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் பரவம் அபாயநிலை உள்ளது. இந்த கழிவுநீரை அகற்றி தூய்மைப்படுத்தி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்துகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டான சோளிங்கர் பிரதான சாலையில் ஏராளமான கடைகள் மற்றும் மார்க்கெட் இயங்கி வருவதால், எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும்.
இந்த பிரதான சாலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, அதிலிருந்து கழிவுநீர் அதிகளவில் வெளியேறி வருகிறது. தற்போது அவை சாலையில் குளம் தேங்கி நின்று, கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த கழிவுநீர் கால்வாயை கடந்த சில மாதங்களாக பேரூராட்சி அதிகாரிகள் முறையாக சுத்தப்படுத்தி பராமரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பள்ளிப்பட்டு பிரதான சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவு பரவியுள்ளது. மேலும், அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.
மேலும், இந்த கழிவுநீர் தேக்கத்தால் அப்பகுதி மக்களுக்கு டெங்கு உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சல் மற்றும் பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை உள்ளது. இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பிரதான சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரால் அதிகளவு மக்கள் நோய் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க, அந்த கழிவுநீரை அகற்றி தூய்மைப்படுத்தி, அக்கால்வாயை முறையாக சுத்தப்படுத்தி பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கவுன்சிலர் கபிலா சிரஞ்சீவி உள்பட அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் செய்திகள்
நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கம்
ஏப்ரல் 1 முதல் அமல் கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர் கட்டணம் நிர்ணயம்
ஊட்டி ஏரியில் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் கொட்டும் மழையிலும் தாவரவியல் பூங்கா ஊழியர்கள் 3வது நாளாக போராட்டம்
தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ்
திருத்துறைப்பூண்டி மனநல காப்பகத்தை சுகாதார துறை அதிகாரி ஆய்வு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி