முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி டானியாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
2023-02-08@ 13:06:02

சென்னை: முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி டானியாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஆவடியில் உள்ள சிறுமி டானியாவின் இல்லத்துக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். ஸ்டீபன்ராஜ், சவுபாக்கியா தம்பதியின் மகள் டானியாவுக்கு சமீபத்தில் 2-வது அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரத்தை சேர்ந்த 9 வயது சிறுமி டான்யா அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். முதலில் சாதாரண ரத்தக்கட்டு என நினைத்த பெற்றோர், அவரை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளித்தும் பாதிப்பு குறையவில்லை. இதனையடுத்து பல மருத்துவமணையில் டானியா-வுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல டானியாவின் முகம், வலது கண், கண்ணம், தாடை, உதடு என ஒரு பக்கம் முழுவதும் சிதையத் தொடங்கியது.
திருவள்ளூர் ஆட்சியர் மற்றும் மருத்துவர்கள் குழந்தைக்கு பரிசோதனை மேற்கொண்டனர். அதன் பிறகு, சிறுமிக்கு சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனையடுத்து தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் சிறுமி டான்யா அனுமதிக்கப்பட்டார். நோய்க்கான முழு சிகிச்சையையும் சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டணமின்றி செய்வதற்கும் உத்தரவாதம் அளித்தது. இந்நிலையில் அவருக்கு ஓட்டுருப்பு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
ஜெர்மன் நாட்டு மருத்துவ வல்லுநர்கள் 2 பேர் அடங்கிய 10 பேர் கொண்ட மருத்துவ குழு அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.இந்த அறுவை சிகிச்சை தொடர்ந்து 8 மணி நேரம் நடக்கும் என்று மருத்துவர்கள் குழு தெரிவித்தனர். அதன்பிறகு சிகிச்சை முடிந்த தனது வீட்டில் முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி டானியாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
Tags:
முகசிதைவு நோய் அறுவை சிகிச்சை சிறுமி டானியா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்மேலும் செய்திகள்
நிதிநிலை அறிக்கையில் ஊக்குவிக்கும் திட்டங்கள் தமிழ்நாட்டில் வேளாண்மை தொழில் புத்தாக்கம் பெறும்: தலைவர்கள் வரவேற்பு
ரூ.2.13 கோடி செலவில் புதுப்பொலிவு பெறும் ராயபுரம் மாடிப்பூங்கா: விரைவில் திறக்க ஏற்பாடு
விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சர்வதேச தரச்சான்று
கிண்டி மேம்பாலத்தில் விபத்து லாரியிலிருந்து டீசல் கசிந்து சாலையில் வழிந்தோடியது
மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு
போரூர் ஏரியில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!