தொழிலாளி மகள் அபகரிப்பு அதிமுக நிர்வாகி கைது
2023-02-08@ 00:39:38

அன்னூர்: கோவை மாவட்டம், அன்னூர் அருகே வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி (60). கூலி தொழிலாளி. இவர் அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரில், ‘எனது 2வது மகளை சந்தோஷ் குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தோம். ஆனால் அவர் சந்தோஷ்குமாரை விட்டு பிரிந்து பொத்தியாம்பாளையத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி கோல்ட் செல்வம் என்பவருடன் பழகி அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறார். கடந்த 1ம் தேதி நாங்கள் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களுடன் பழனிக்கு பாதயாத்திரை சென்றோம். அப்போது, தொப்பம்பட்டி பிரிவு அருகே கோல்ட் செல்வம் வந்து எங்களிடம் தகராறு செய்து, ஜாதி பெயரை சொல்லி தரக்குறைவாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். கடந்த 5ம் தேதி எனது வீட்டை சூறையாடினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். புகாரின்பேரில், ன்கொடுமை உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோல்டு செல்வத்தை போலீசார் கைது செய்து, மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:
Worker's daughter embezzlement ADMK executive arrested தொழிலாளி மகள் அபகரிப்பு அதிமுக நிர்வாகி கைதுமேலும் செய்திகள்
ஆருத்ரா நிதி நிறுவனம் ரூ.2,438 கோடி மோசடி முக்கிய குற்றவாளியான பாஜ நிர்வாகி ஹரிஷ் கைது: ரகசிய இடத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை
சிறுவனுக்கு செக்ஸ் டார்ச்சர் வாலிபர் போக்சோவில் கைது: உடலில் கடித்து காயப்படுத்திய கொடூரம்
ரவுடியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது
மணிப்பூரில் இருந்து கடத்தி வந்த 9 கிலோ மெத்தம் பெட்டமைன் போதை பவுடர் பறிமுதல்: 2 பேர் கைது; முக்கிய குற்றவாளிக்கு வலை
புதிய இணைப்புக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் மின்வாரிய அதிகாரி கைது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி