குடிநீர் தொட்டியில் நாய் சடலம் வீசிய மனநிலை பாதித்த வாலிபர் கைது
2023-02-08@ 00:36:38

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், நாய் இறந்து கிடந்தது. ஊராட்சி தலைவர் காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், எம்.புதுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதித்த வாலிபர் அய்யனார் (22) என்பவரை நாயை வீசியது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். இதுகுறித்து சிவகாசி டி.எஸ்.பி., தனஞ்செயன் கூறுகையில், ‘‘குடிநீர் தொட்டியில் நாயின் சடலம் கிடந்ததை பிப். 6ல் பார்த்துள்ளனர். ஆனால், பிரேத பரிசோதனையில் நாய் பிப். 3ம் தேதியே இறந்தது தெரிய வந்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தொட்டியில் ஏறி போட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றோம்’’ என்றார். இதற்கிடையே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஊராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் பிளிச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்தனர்.
மேலும் செய்திகள்
ஆருத்ரா நிதி நிறுவனம் ரூ.2,438 கோடி மோசடி முக்கிய குற்றவாளியான பாஜ நிர்வாகி ஹரிஷ் கைது: ரகசிய இடத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை
சிறுவனுக்கு செக்ஸ் டார்ச்சர் வாலிபர் போக்சோவில் கைது: உடலில் கடித்து காயப்படுத்திய கொடூரம்
ரவுடியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது
மணிப்பூரில் இருந்து கடத்தி வந்த 9 கிலோ மெத்தம் பெட்டமைன் போதை பவுடர் பறிமுதல்: 2 பேர் கைது; முக்கிய குற்றவாளிக்கு வலை
புதிய இணைப்புக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் மின்வாரிய அதிகாரி கைது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி