SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலியல் தொந்தரவு மாணவி தற்கொலை மாணவர்கள் கைது

2023-02-08@ 00:36:00

காரைக்குடி: காரைக்குடி அருகே பாலியல் தொந்தரவால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். கல்லூரி மாணவி. இவருடன் படித்து வந்த அரியக்குடியை சேர்ந்த பசுபதி என்ற இளவரசன்(22), தேவகோட்டை ரெகுநாதபுரத்தை சேர்ந்த பாலகணேஷ்(19) ஆகியோர் மாணவியிடம் முதலில் நட்பாக பழகியுள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி, கடந்த வாரம் எலி மருந்தை தின்றார். மயங்கிய அவரை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று இறந்தார். இதுகுறித்து மாணவியின் உறவினர் கொடுத்த புகாரின்பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து பசுபதி என்ற இளவரசன், பாலகணேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்