பைக் மீது லாரி மோதியதில் சிறுவன் பலி எதிரொலி: 22 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு
2023-02-05@ 21:06:42

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் தஸ்னா பகுதியில் உள்ள சாலையில் கடந்த 3ம் தேதி 11ம் வகுப்பு மாணவன் ஆஷிஷ் (17), தனது நண்பனுடன் பைக்கில் சென்றான். சாலையின் எதிர் திசையில் ஆஷிஷ் பைக் ஓட்டி சென்றபோது, எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் ஆஷிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அவனுடன் வந்த சிறுவன் படுகாயமடைந்தான். தகவலறிந்து காசியாபாத் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் 22 பேர் பைக் ஓட்டியுள்ளனர். அவர்களை போலீசார் பிடித்ததோடு, பைக் ஓட்ட அனுமதித்த அவர்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கை தொடரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
எத்தனை சதி செய்தாலும் ராகுல் காந்தி போராட்டத்தை தொடர்வார்; தொடர்ந்து சண்டை செய்வோம்: காங்கிரஸ் ட்வீட்
சிறை தண்டனை அனுபவித்து வரும் சித்துவின் மனைவிக்கு புற்றுநோய்: கணவர் குறித்து உருக்கமான பதிவு
ராகுலின் தகுதிநீக்கம் ஜனநாயகத்துக்கு விரோதமானது; எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் பாஜக: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்..!
ஜார்க்கண்டில் வீட்டின் மீது மோதிய கிளைடர் விமானம்: இரண்டு குழந்தைகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்..!!
சித்தூர் எம்எஸ்ஆர் சர்க்கிள் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்-வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி
கொரோனா காலத்தில் பரோலில் விடுவிக்கப்பட்ட கைதிகள் சரணடைய வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!