பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல்
2023-02-05@ 20:17:46

டெல்லி: பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பாரம்பரியத்துக்கு ஹைட்ரஜன் என்ற பெயரில் திட்டத்துக்கு தலா ரூ.80 கோடியில் ஹைட்ரான் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹைட்ரான் ரயிலை இயக்க ஒவ்வொரு வழித்தடத்தில் கட்டமைப்புகளை உருவாக்க ரூ.70 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்:
பசுமை போக்குவரத்து தொழில்நுட்ப முறையில் ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்துவது அதிகம் லாபம் தரும். முதன்முறையாக பாரம்பரிய மற்றும் மலைவாழ் நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. பாரம்பரியத்துக்கு ஹைட்ரஜன் என்ற பெயரில் திட்டத்துக்கு தலா ரூ.80 கோடியில் ஹைட்ரான் ரயில்களை இயக்க ரயில்வே முடிவே முடிவு செய்துள்ளது. ஹைட்ரஜன் ரயிலை இயக்க ஒவ்வொரு வழித்தடத்திலும் கட்டமைப்புகளை உருவாக்க ரூ.70 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் கூறினார்.
முதலாவது ஹைட்ரஜன் ரயில் வடக்கு ரயில்வே மண்டலத்தில் ஜிந்த் - சோனிபட் இடையே திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டுக்குள் ஜிந்த் - சோனிபட் இடையே ஹைட்ரஜன் ரயிலை சோதனை முறையில் இயக்க முடிவு செய்துள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்தார்.
Tags:
பாரம்பரிய நகரங்கள் மலை வாழிட நகரங்கள் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டம் ஒன்றிய அமைச்சர் தகவல்மேலும் செய்திகள்
எத்தனை சதி செய்தாலும் ராகுல் காந்தி போராட்டத்தை தொடர்வார்; தொடர்ந்து சண்டை செய்வோம்: காங்கிரஸ் ட்வீட்
சிறை தண்டனை அனுபவித்து வரும் சித்துவின் மனைவிக்கு புற்றுநோய்: கணவர் குறித்து உருக்கமான பதிவு
ராகுலின் தகுதிநீக்கம் ஜனநாயகத்துக்கு விரோதமானது; எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் பாஜக: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்..!
ஜார்க்கண்டில் வீட்டின் மீது மோதிய கிளைடர் விமானம்: இரண்டு குழந்தைகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்..!!
சித்தூர் எம்எஸ்ஆர் சர்க்கிள் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்-வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி
கொரோனா காலத்தில் பரோலில் விடுவிக்கப்பட்ட கைதிகள் சரணடைய வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!