அரக்கோணம் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற விஏஓ
2023-02-05@ 00:35:28

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை சேர்ந்தவர் முகமது இலியாஸ்(36). மின்னல் கிராம விஏஓ. இவருக்கு, மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று வீட்டில் இருந்த முகமது இலியாஸ் திடீரென கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர். ஒருவருக்கு சொந்தமான நிலத்தை ஆன்லைன் பட்டா மூலம் வேறு ஒருவருக்கு இவர் மாற்றியதாக கூறப்படுகிறது. இதுபற்றி நிலத்தின் உரிமையாளர் அரக்கோணம் ஆர்டிஓவிடம் புகார் அளித்துள்ளாராம். இதனால் மனவேதனையில் இருந்தவர் தற்கொலைக்கு முயன்றாரா என தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
மேலும் செய்திகள்
தென் இந்தியாவில் முதல் முறையாக சங்கரன்கோவில் அருகே 120 அடி உயர உலக அமைதி கோபுரத்தில் புதியதாக புத்தர் சிலைகள் அமைப்பு: புத்த துறவிகள் பங்கேற்பு
தமராக்கி மஞ்சுவிரட்டு, ஆவியூர் ஜல்லிக்கட்டில் திமிலை உயர்த்தி திமிறிய காளைகளை தீரத்துடன் அடக்கிய மாடுபிடி வீரர்கள்
திருவாரூர் கோயிலில் ஏப். 1ல் ஆழித்தேரோட்டம்: 5 தேர்களுக்கு சீலைகள் பொருத்தும் பணி தீவிரம்
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
கொளுத்தும் வெயில் தாக்கத்திலிருந்து ஆடு, மாடுகளை பாதுகாக்க அசத்தல் ‘டிப்ஸ்’: விவசாயிகளுக்கு கால்நடைத்துறை அட்வைஸ்
அலங்காநல்லூர் அருகே பெரியாறு கால்வாய் பாலம் ‘டமால்’: இடிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கு அவதி
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்