பாகிஸ்தான் மசூதியில் 101 பேர் பலியான விவகாரம்: தாக்குதல் நடத்தியவர் அடையாளம் தெரிந்தது
2023-02-04@ 17:08:40

பெஷாவர்: பாகிஸ்தான் மசூதியில் 101 பேர் பலியான விவகாரத்தில் தாக்குதல் நடத்தியவர் அடையாளம் தெரிந்தது. பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்கவா மாகாண தலைநகர் பெஷாவரில் பாதுகாப்பு மிகுந்த போலீஸ் லைன் பகுதி உள்ளது. இங்குள்ள மசூதியில் கடந்த 30ம் தேதி மதியம் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் மசூதியின் ஒரு பகுதி இடிந்தது.
உடனடியாக மீட்பு குழுவினர், போலீசார் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டன. குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்கள், இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இத்தாக்குதலில், 97 போலீஸ் அதிகாரிகள் உட்பட மொத்தம் 101 பேர் பலியாகினர். ஏராளமானோர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாகிஸ்தான் வரலாற்றிலேயே மிக கொடூரமான இத்தாக்குதல் சம்பவத்துக்கு, பாகிஸ்தான் தலிபான் என்றழைக்கப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. தங்கள் அமைப்பின் கமாண்டர் கொல்லப்பட்டதற்கு, பழிக்குப் பழி நடவடிக்கை என தெரிவித்துள்ளது.
விசாரணையில், தொழுகையின்போது, முதல் வரிசையில் இருந்த ஒருவர் தனது உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த சம்பவத்தில் குண்டு வெடிப்பு நடத்திய பயங்கரவாதியின் அடையாளத்தை மரபணு பரிசோதனை மூலம் போலீசார் கண்டறிந்தனர். இது, இந்த வழக்கில் மிக முக்கிய திருப்பு முனை எனவும், குற்றவாளியின் அடையாளத்தை கொண்டு தாக்குதலில் தொடர்புடைய ஒரு பெண்ணை கைது செய்து விசாரித்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.
மேலும் செய்திகள்
ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ஜூக்கர்பெர்க் - பிரிசில்லா தம்பதிக்கு 3வது பெண் குழந்தை
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு
அமெரிக்காவின் இந்தியாவுக்கான தூதராக கார்செட்டி பதவியேற்பு: கமலா ஹாரிஸ் பங்கேற்பு
லண்டன் நாடாளுமன்ற சதுக்கம் அருகே காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டம்
புளோரிடா பல்கலை. அறங்காவலர் குழுவில் இந்தியர்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பதவியேற்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி