ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல்: மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பு
2023-02-04@ 16:47:20

உஜ்ஜைன்: மத்தியப்பிரதேசத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற காவல்துறையினர் மீது குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள Jhitar Khedi கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் உதவியுடன் வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியை சிலர் ஜேசிபி இயந்திரத்தை தடுத்து நிறுத்தி காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் காவல்துறையினர் மீது திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. தாக்குதலுக்கு பயந்து காவல்துறையினர் பின்வாங்கிய நிலையில் விடாப்பிடியாக அப்பகுதியை சேர்ந்த சிலர் காவலர்கள் மீதும், வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 9 காவலர்கள் மற்றும் ஜேசிபி ஓட்டுநர் படுகாயம் அடைந்ததாகவும், காவல்துறையின் வாகனம் ஒன்று சேதமடைந்ததாகவும், உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைப்பதே பிரதமர் மோடியின் புதிய இந்தியா: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்
நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்வீட்
ராகுலின் குரலை ஒடுக்க பாஜக சதி; நீதிமன்றத்தில் வெற்றி பெறுவோம்: அபிஷேக் மனு சிங்வி பேட்டி
ராகுல் காந்தி சிறை, அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
எத்தனை சதி செய்தாலும் ராகுல் காந்தி போராட்டத்தை தொடர்வார்; தொடர்ந்து சண்டை செய்வோம்: காங்கிரஸ் ட்வீட்
சிறை தண்டனை அனுபவித்து வரும் சித்துவின் மனைவிக்கு புற்றுநோய்: கணவர் குறித்து உருக்கமான பதிவு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி