ரூ.16,133 கோடி வட்டிக்கு ஈடாக வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகளை பெற ஒன்றிய அரசு ஒப்புதல்
2023-02-04@ 00:38:19

புதுடெல்லி: இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா நிறுவனம் ஏற்கனவே கடனில் தத்தளித்து வருகிறது. இந்நிறுவனம், அலைக்கற்றைக்கான தவணை மற்றும் ஏஜிஆர் கட்டணத்திற்கான வட்டி தொகையாக ரூ.16,133 கோடியை ஒன்றிய அரசுக்கு வழங்க வேண்டி உள்ளது. இந்த வட்டி நிலுவைத் தொகைக்கு பதிலாக நிறுவனத்தின் பங்குகளை பெற்றுக் கொள்ள ஒன்றிய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் முன்வந்தது. இதற்கு வோடபோன் ஐடியா நிர்வாக குழு ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியிடம் வோடபோன் ஐடியா நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில், வட்டி நிலுவைக்கு மாற்றாக பங்குகளை வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக வோடபோன் ஐடியா நிறுவனம் நேற்று அறிக்கை விடுத்தது. இதன்படி, நிறுவனத்தின் ஒரு பங்கு ரூ.10 என்ற விலையில் அரசுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 35 சதவீத பங்குகள் ஒன்றிய அரசு வசமாகும். நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராகவும் ஒன்றிய அரசு இருக்கும் என வோடபோன் ஐடியா நிறுவனம் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய சிக்கல்: ரூ.1.14 கோடி அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி
தனது வீட்டை தாக்கிய பழங்குடி வகுப்பினர் மீது நடவடிக்கை வேண்டாம்: எடியூரப்பா பேட்டி
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட்
ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள பூங்காவில் விடப்பட்ட சிவிங்கிப்புலி உயிரிழப்பு
டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்..!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்