SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மும்பையில் தாக்குதல் நடத்தப்போவதாக தலிபான் பெயரில் மிரட்டல்: போலீஸ், என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை

2023-02-04@ 00:38:18

மும்பை: மும்பை நகரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று இ மெயில்  மூலம் தலிபான் பெயரில் வந்துள்ள மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தேசிய புலனாய்வு அமைப்புக்கு அனுப்பப்பட்டுள்ள இ.மெயிலில் இந்த மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து  மும்பை நகரில் உஷார் நடவடிக்கை  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேசியபுலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வு க்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து நேற்று இ மெயில் ஒன்று வந்தது. அந்த  இமெயிலை அனுப்பிய மர்ம நபர் தான் தலிபான் தீவிரவாத  அமைப்பை சேர்ந்தவர்என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  மும்பையில் பயங்கரவாத தாக்குதல்  நடத்தப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை போலீசார் நேற்று உறுதி  செய்தனர்.  மிரட்டல் இ-மெயில் தகவலை என்.ஐ.ஏ. அதிகாரிகள்  போலீசாரிடம்  தெரிவித்தனர்.  இந்த மிரட்டலை தொடர்ந்து மும்பை மட்டுமல்ல  மகாராஷ்டிராவின் பல்வேறு நகரங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மிரட்டல் இ-மெயில் குறித்து மும்பை போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் கூட்டாக தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்