வரும் 28ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்: பொதிகை, கொல்லம் எக்ஸ்பிரஸ் மதுரை, திண்டுக்கல் செல்லாது
2023-02-04@ 00:37:48

நெல்லை: இரட்டை ரயில்பாதை பணிகள் காரணமாக இம்மாத இறுதியில் தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் தற்போது இரட்டை ரயில்பாதை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இவ்வாண்டுக்குள் அப்பணிகளை முடிக்க வேண்டும் என்பதால் சில இடங்களில் பணிகள் இரவும், பகலும் நடந்து வருகின்றன. இம்மாத இறுதியில் மதுரை - திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நடக்கின்றன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர்-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (ரயில் எண். 12661/12662) ரயில் வரும் 23ம் தேதி முதல் முதல் மார்ச் 3ம் தேதி வரை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். திண்டுக்கல், மதுரை மார்க்கத்தில் செல்லாது.
மானாமதுரை ரயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்லும். செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு செல்லும் பொதிகை எக்ஸ்பிரசுக்கு எலக்ட்ரிக், டீசல் இன்ஜின் மாற்றம் விருதுநகர் ரயில் நிலையத்தில் நடைபெறும். சென்னை எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ் (ரயில் எண். 16101/16102) ரயில் வரும் 28ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். மானாமதுரை ரயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்லும். திண்டுக்கல், மதுரை வழியாக செல்லாது. பயணிகள் இதற்கு ஏற்றபடி பயணங்களை அமைத்துக் கொள்ள தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
Tags:
வரும் 28ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்: பொதிகை கொல்லம் எக்ஸ்பிரஸ் மதுரை திண்டுக்கல் செல்லாதுமேலும் செய்திகள்
தமிழக அரசியல் களத்தை பாஜக மாற்றிவிட்டது.! பாஜகவிற்கு கூண்டுக்குள் இருந்து, வெளியே வரும் நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை பேச்சு
கரூர் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம்: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
நாட்றம்பள்ளி தாலுகாவில் குறவர் இன மக்களுக்கு ஜாதி சான்று வழங்க வேண்டும்-தாசில்தாரிடம் மனு
திருப்பத்தூர் ஆண்டியப்பனூர் அணையில் ₹5.97 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்-கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு
ஜோலார்பேட்டை அருகே அடிக்கடி ரயில்வே கேட் மூடுவதால் மாணவர்கள், பொதுமக்கள் அவதி-மேம்பாலம் அமைக்க கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைக்கு அடிமையான மாணவர்களை கண்டறிந்து நல்வழிப்படுத்த வேண்டும்-கல்லூரி முதல்வர்களுக்கு எஸ்பி அறிவுரை
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!