புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டு 2 பேர் சிக்கினர்
2023-02-04@ 00:07:53

அம்பத்தூர்: சென்னை புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். கொரட்டூர் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி (68). அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த மாதம் 23ம் தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாவில் இருந்த ரூ.2 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. புகாரின்பேரில், கொரட்டூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமணி வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்தார். அதில், பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ் குமார் (22), ராஜி (20) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் இருவரும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பின்னர் இருவரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது-₹4.50 லட்சம் மதிப்பிலான 11 வாகனங்கள் பறிமுதல்
குலசேகரம், திருவட்டார் பகுதிகளில் போஸ்டர் ஒட்டி தேடிய பிரபல ரப்பர் ஷீட் திருடன் கூட்டாளிகளுடன் கைது-1,150 ரப்பர் ஷீட், 300 கிலோ பாத்திரங்கள் பறிமுதல்
கெங்கவல்லி அருகே வனப்பகுதியில் உடும்பு வேட்டையாடியவர் கைது-சிசிடிவி கேமரா மூலம் சிக்கினார்
செஞ்சி அருகே தகாத உறவால் கணவரை கொலை செய்ய முயற்சி-மனைவி, காதலன் கைது
புதுமாப்பிளை கொலை கோர்ட்டில் 2 பேர் சரண்
கோவை நீதிமன்றம் வளாகத்தில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்: வழக்கறிஞர்கள் குவிந்ததால் பரபரப்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி