SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4-ம் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஒரே நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்

2023-02-03@ 16:39:54

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4-ம் வேட்புமனு தாக்கல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இடைத்தேர்தலில் போட்டியிட 4-வது  நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் , அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த், பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக வேட்பாளர் செந்தில் முருகன் ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தில் இருந்து கடந்த ஜன.29-ம் முதல் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி, மாநகராட்சி மைய அலுவலகத்தில் கடந்த ஜன.29-ம் தேதி முதல் வேட்பு மனுக்களை பெற்று சென்றனர். மொத்தம் 48 பேர் வேட்பு மனுக்களை பெற்று சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஜன.31 முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அதன்படி முதல் 3 நாட்களில் தேமுதிக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 4-ம் நாள் வேட்புமனு தாக்கல் இன்று 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட ஒரே நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்