மறைமலைநகர் அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றி மிரட்டிய வாலிபர் கைது
2023-02-03@ 15:49:21

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே சென்னை-திருச்சி செல்லும் ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் நேற்றிரவு ஒரு வாலிபர் குடிபோதையில் பட்டாக்கத்தியுடன் சுற்றி திரிந்து, அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளையும் பாதசாரிகளையும் மிரட்டி பணம் பறிப்பதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் இரவுநேர ரோந்து வாகன போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மறைமலைநகர் அருகே டான்சி பேருந்து நிறுத்தம் அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றி திரிந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் மறைமலைநகர் அருகே வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த ரவுடி மணிகண்டன் (26) என்பதும், இவர்மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர் நேற்றிரவு மறைமலைநகர் பகுதியில் பட்டாக்கத்தி முனையில் மக்களை மிரட்டி பணம், நகை பறிப்பில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது. இப்புகாரின்பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டாக்கத்தி முனையில் பணம் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட ரவுடி மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதல் டிஜிபி, ஐஜி அதிரடி ஆய்வு
கைத்தறி பெட்ஷீட்டில் ஒருபுறம் தோனி மறுபுறம் விராட் கோலி உருவப்படம்: நெசவாளர் அசத்தல்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி பலி: உரிமையாளர் சிறையில் அடைப்பு
செங்கல்பட்டு அருகே புக்கத்துறை - உத்திரமேரூர்சாலையை இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படுவதற்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
திருச்சில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது காவல்துறை வழக்குப்பதிவு
நாங்குநேரி - மேலப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்..!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி