ஓபிஎஸ், சசிகலா சந்திப்பு? அதிமுக ஒன்றிணைவதற்கான காலம் நெருங்கி வருகிறது: சசிகலா பரபரப்பு பேட்டி
2023-02-03@ 14:07:54

சென்னை: அதிமுக ஒன்றிணைவதற்கான காலம் நெருங்கி வருகிறது என சசிகலா தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில்முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால், ‘இரட்டை இலை’ சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் 54ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்; அதிமுக ஒன்றிணைவதற்கான காலம் நெருங்கி வருகிறது. அதிமுகவை முழுமையாக புரிந்து கொண்டால் பாஜகவை தேடி செல்லும் தவறுகள் நடக்காது. அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். தனித்தனியாக இருந்து செயல்படுவதை தவிர்த்து அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி பெற முடியும். தனித்தனியாக இருந்தால் அது அதிமுகவுக்கு நல்லதல்ல; அதைத்தான் சொல்ல முடியும் இவ்வாறு கூறினார்.
மேலும் செய்திகள்
தூத்துக்குடியில் பனை மேம்பாட்டுத் திட்டம்.. கோவையில் பூச்சிகள் அருங்காட்சியகம் மேம்பாடு : வேளாண் பட்ஜெட்டின் A டூ Z அறிவிப்புகள்!!
வெளிநாட்டு தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளும் வகையில் விவசாயிகள் வெளிநாட்டில் பயிற்சி பெற ரூ.3 கோடி ஒதுக்கீடு..!!
விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி... 10 லட்சம் குடும்பங்களுக்கு பழ மரக்கன்றுகள், மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா: அசத்தல் அறிவிப்புகள்!!
விவசாயிகளுக்கு தகவல் வழங்க WhatsApp குழுக்கள், ஒரு தளம் ஒரு பயன் திட்டம், கோவையில் கருவேப்பிலை தொகுப்பு : வேளாண் பட்ஜெட்டில் தகவல்!!
ரேஷனில் 2 கிலோ கேழ்வரகு .. குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள், விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு: வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்!!
நிலத்தடி நீர் அதிகரிப்பு. 119 லட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்து தமிழ்நாடு சாதனை :அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உரை!!
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!