என்னுடைய மகன் திருமகன் ஈவெரா விட்டுச் சென்ற பணியை தொடருவேன்: வேட்புமனுவை தாக்கல் செய்த பின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி
2023-02-03@ 13:04:31

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால், மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் வரை 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி முகமது அனிபா, திருச்சுழியை சேர்ந்த சுந்தரமூர்த்தி, ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி மாநில தலைவர் காந்தி, சென்னை விருகம்பாக்கம் இசக்கிமுத்து, உழைப்பாளி மக்கள் கட்சி சார்பில் குப்புசாமி, முகமது இலியாஸ், மண்ணின் மைந்தர்கள் கழகம் ஜார்ஜ் பெர்னாண்டஸ், தேசிய மக்கள் கழகம் விஜயகுமாரி, தங்கவேல் ஆகிய 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளை திமுக கூட்டணி சிறப்பாக செய்கிறது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் வெற்றி வாய்ப்பு தருவார்கள். நான் வெற்றி பெற்றால், ஈரோடு மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வருவேன். மதச்சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளரையே ஈரோடு மக்கள் ஆதரிக்கிறார்கள். என்னுடைய மகன் திருமகன் ஈவெரா விட்டுச் சென்ற பணியை தொடருவேன். யார் எதிர்க்கிறார்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. இவ்வாறு கூறினார்.
மேலும் செய்திகள்
தூத்துக்குடியில் பனை மேம்பாட்டுத் திட்டம்.. கோவையில் பூச்சிகள் அருங்காட்சியகம் மேம்பாடு : வேளாண் பட்ஜெட்டின் A டூ Z அறிவிப்புகள்!!
வெளிநாட்டு தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளும் வகையில் விவசாயிகள் வெளிநாட்டில் பயிற்சி பெற ரூ.3 கோடி ஒதுக்கீடு..!!
விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி... 10 லட்சம் குடும்பங்களுக்கு பழ மரக்கன்றுகள், மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா: அசத்தல் அறிவிப்புகள்!!
விவசாயிகளுக்கு தகவல் வழங்க WhatsApp குழுக்கள், ஒரு தளம் ஒரு பயன் திட்டம், கோவையில் கருவேப்பிலை தொகுப்பு : வேளாண் பட்ஜெட்டில் தகவல்!!
ரேஷனில் 2 கிலோ கேழ்வரகு .. குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள், விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு: வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்!!
நிலத்தடி நீர் அதிகரிப்பு. 119 லட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்து தமிழ்நாடு சாதனை :அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உரை!!
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!