ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு
2023-02-03@ 09:32:54

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு மேற்கொண்டார். அதிமுகவில் எந்த அணிக்கு ஆதரவு என்று பாஜக இதுவரை அறிவிக்காத நிலையில் அண்ணாமலை பழனிசாயை சந்தித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுவார் என பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் இடைத்தேர்தலில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என அறிவித்தார்.
இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு மேற்கொண்டார். இதையடுத்து ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்புமனு தாக்கல் ஒத்திவைத்துள்ளது.
அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று பிற்பகல் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் தாக்கல் செய்ய இருந்த நிலையில் வேட்புமனு தாக்கல் 7ம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிப்பு, தகுதி நீக்கம் ஆகியவற்றை கண்டித்து நாளை சத்தியாகிரக போராட்டம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அறிவிப்பு
அன்று தலைவர் பதவியில் இருந்து விலகல்... இன்று எம்பி பதவி தகுதி நீக்கம்: ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?
அதானி குறித்த எனது பேச்சை கண்டு பிரதமர் மோடியின் கண்களில் பயம் தெரிந்தது: தகுதி நீக்கம் தொடர்பாக ராகுல்காந்தி பேட்டி!
சென்னை, மும்பை, கொல்கத்தாவில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் :முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!
தொழில்நுட்ப வளர்ச்சியால் வருங்காலத்தில் உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும் :ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேச்சு!!
கர்நாடக சட்டமன்ற தேர்தல்: 124 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி