இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
2023-02-03@ 00:31:52

மதுரை: இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டில் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறித்து அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. முகம்மது ஆசிப் மற்றும் 10 பேர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புதவற்கான அறிவிப்பு கடந்த 2019ல் வெளியானது. இதில் பி.சி (முஸ்லிம்) பிரிவினருக்காக 62 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில், எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு முடித்து சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றோம். 62 இடங்களில் வெறும் 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கில், 52 இடங்களில் 43 பெண்களுக்கானது. அறிவிப்பு வெளியாகி 4 ஆண்டுகள் ஆனதால் காலாவதியாகிவிட்டது எனக்கூறி தள்ளுபடியானது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தனர். இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் ஆகியோர், ‘‘2019ம் ஆண்டு அறிவிப்பின்படி, பி.சி (முஸ்லிம்) ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர்? இவர்களது மதிப்பெண் உள்ளிட்ட விபரம் என்ன? இவர்களில் எத்தனை பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறித்த விபரங்களை சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
Tags:
Second Level Constable Post As per Reservation Report ICourt Branch இரண்டாம் நிலை காவலர் பணி இட ஒதுக்கீட்டின்படி அறிக்கைய ஐகோர்ட் கிளைமேலும் செய்திகள்
தென் இந்தியாவில் முதல் முறையாக சங்கரன்கோவில் அருகே 120 அடி உயர உலக அமைதி கோபுரத்தில் புதியதாக புத்தர் சிலைகள் அமைப்பு: புத்த துறவிகள் பங்கேற்பு
தமராக்கி மஞ்சுவிரட்டு, ஆவியூர் ஜல்லிக்கட்டில் திமிலை உயர்த்தி திமிறிய காளைகளை தீரத்துடன் அடக்கிய மாடுபிடி வீரர்கள்
திருவாரூர் கோயிலில் ஏப். 1ல் ஆழித்தேரோட்டம்: 5 தேர்களுக்கு சீலைகள் பொருத்தும் பணி தீவிரம்
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
கொளுத்தும் வெயில் தாக்கத்திலிருந்து ஆடு, மாடுகளை பாதுகாக்க அசத்தல் ‘டிப்ஸ்’: விவசாயிகளுக்கு கால்நடைத்துறை அட்வைஸ்
அலங்காநல்லூர் அருகே பெரியாறு கால்வாய் பாலம் ‘டமால்’: இடிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கு அவதி
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்