நாடாளுமன்ற துளிகள்...
2023-02-03@ 00:31:45

* 78 துறைகளில் 9.79 லட்சம் வேலை காலி
மாநிலங்களவை கேள்வி நேரத்தில் பாஜ எம்பி சுஷில் குமார் மோடி எழுப்பிய வேலை வாய்ப்பு குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஒன்றிய அரசு பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிஜேந்திர சிங், ``ரயில்வேயில் 2.93 லட்சம், பாதுகாப்பு துறை 2.64 லட்சம், உள்துறை 1.43 லட்சம் உள்பட 78 அமைச்சகங்களில் 9.79 லட்சத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன,’’ என்று தெரிவித்தார்.
* நினைவு சின்னங்களை பாதுகாக்க ரூ.260 கோடி
ஒன்றிய கலாசார அமைச்சர் கிஷன் ரெட்டி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ``தமிழ்நாட்டில் உள்ள 412, கர்நாடகாவில் 506, உபி.யில் 743 உள்பட நாடு முழுவதும் தொல்லியல் துறையின் கீழ் 3,696 நினைவு சின்னங்கள் ஒன்றிய அரசினால் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றை பாதுகாக்க, பராமரிக்க கடந்த 2021-22ம் ஆண்டில் அரசு ரூ.270 கோடி செலவிட்டுள்ளது. கடந்த 2019-20 மற்றும் 2020-21ம் ஆண்டுகளில் முறையே ரூ.430 கோடி, ரூ.260 கோடி செலவிடப்பட்டுள்ளது,’’ என்று கூறினார்.
* இந்தியாவில் 94.50 கோடி வாக்காளர்கள்
ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 94.50 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்று ஒன்றிய அரசு மாநிலங்களவையில் தெரிவித்து உள்ளது.
ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு இதுதொடர்பாக அளித்த பதில்: இந்திய தேர்தல் ஆணைய தகவல்களின்படி 2023 ஜனவரி 1 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் இறுதி தகவல்படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 94,50,25,694 ஆகும். 1951ல் இந்தியாவில் 17.32 கோடி வாக்காளர்கள் இருந்தனர். 2019 ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது இந்தியாவில் 91.20 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
* உச்ச நீதிமன்றத்தின் வேலைநாட்கள் அதிகரிப்பு?
ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: உச்ச நீதிமன்றம் ஒரு வருடத்தில் சராசரியாக 222 நாட்கள் வேலை செய்கிறது. நீதிமன்றங்களின் வேலை நேரம், வேலை நாட்கள் மற்றும் விடுமுறைகள் ஆகியவை அந்தந்த நீதிமன்றங்களால் உருவாக்கப்பட்ட விதிகளின்படி பரிந்துரைக்கப்படுகின்றன. நீதிமன்றத்தின் அமர்வுகள் மற்றும் விடுமுறைகளை உள்ளடக்கிய நடைமுறைகளை ஒழுங்குபடுத்துகிறது. நீதிமன்றங்களுக்கான குறைந்தபட்ச கட்டாய வேலை நேரம் மற்றும் வேலை நாட்களை நிர்ணயிப்பதில் ஒன்றிய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. மேலும், உச்ச நீதிமன்றத்தின் வேலை நாட்களையோ அல்லது வேலை நேரத்தையோ அதிகரிக்க எந்த முன்மொழிவும் தற்போது இல்லை. இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
மேலும் செய்திகள்
சிறை தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்: நாளை மறுநாள் விசாரணை
ஒரு மணி நேரம் தேவையற்ற மின்பயன்பாட்டை தவிர்த்திடுக : பூமிநேரம் தினத்தை முன்னிட்டு கடற்கரையில் பிரம்மாண்ட மணற்சிற்பம்!!
ஒயிட்ஃபீல்டு முதல் கிருஷ்ணராஜபுர வரையிலான பெங்களூரு மெட்ரோ ரயில் வழித்தடத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பயணம்!!
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய சோகாதாரத்துறை கடிதம்
36 செயற்கைகோளுடன் LVM3-M3 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான 24 மணிநேர கவுன்ட்டவுன் தொடங்கியது!!!
இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை தகுதி நீக்க நடவடிக்கையில் சிக்கிய தலைவர்கள்..!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி