நாகாலாந்தில் காரில் ரூ.1 கோடி வைத்திருந்த பெண் கைது
2023-02-03@ 00:31:32

கோகிமா: நாகலாந்து சட்டமன்றத்துக்கு வரும் 27ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி, தேர்தல் கண்காணிப்பு குழுவினர் கார், பைக் உள்ளிட்ட அனைத்து வாகனங்களை சோதனை தீவிர செய்து வருகின்றனர்.இந்நிலையில், மணிப்பூர் எல்லையில் உள்ள இரு மாநிலங்களின் செக் போஸ்ட் பகுதியில் மணிப்பூரில் பதிவு செய்யப்பட்ட காரில் ஒரு பெண் வந்தார். அந்த காரை நிறுத்தி கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.1 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஏதாவது அரசியல் கட்சிக்கு கொடுப்பதற்காக இந்த பணத்தை அவர் கொண்டு வந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
சிறை தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்: நாளை மறுநாள் விசாரணை
ஒரு மணி நேரம் தேவையற்ற மின்பயன்பாட்டை தவிர்த்திடுக : பூமிநேரம் தினத்தை முன்னிட்டு கடற்கரையில் பிரம்மாண்ட மணற்சிற்பம்!!
ஒயிட்ஃபீல்டு முதல் கிருஷ்ணராஜபுர வரையிலான பெங்களூரு மெட்ரோ ரயில் வழித்தடத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பயணம்!!
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய சோகாதாரத்துறை கடிதம்
36 செயற்கைகோளுடன் LVM3-M3 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான 24 மணிநேர கவுன்ட்டவுன் தொடங்கியது!!!
இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை தகுதி நீக்க நடவடிக்கையில் சிக்கிய தலைவர்கள்..!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி