SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீவிரவாதியாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர் கைது

2023-02-03@ 00:31:31

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியாக மாறிய அரசு பள்ளி ஆசிரியரை போலீசுார் கைது செய்தனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு மே மாதம்  வைஷ்ணவி தேவி கோயிலுக்கு பக்தர்கள் சென்ற பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஆரிப்பை போலீசார் கைது செய்தனர். இவர் அரசு பள்ளி ஆசிரியராக இருந்து தீவிரவாதியாக மாறியது தெரியவந்துள்ளது. பக்தர்கள் சென்ற பேருந்து குண்டு வெடிப்பு மட்டுமின்றி பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் இவருக்கு தொடர்புள்ளதும் தெரியவந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்