ரூ.12.49 கோடி கோயில் நிலம் மோசடி சென்னை தம்பதி, புதுவை விஏஓ கைது
2023-02-03@ 00:30:10

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.12.49 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்து விற்றது தொடர்பாக சென்னை தம்பதி, புதுவை விஏஓ உட்பட 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி நகரின் மையப் பகுதியான பாரதி வீதியில் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமாக ரூ.12 கோடியே 49 லட்சத்து 52 ஆயிரம் மதிப்புள்ள விவசாய நிலம் உள்ளது. இதனை போலி ஆவணங்கள் தயாரித்து சிலர் அபகரித்து விட்டதாக கோயில் அறங்காவலர் குழு செயலர் சுப்பிரமணியன் சிபிசிஐடி போலீசில் கடந்த ஆகஸ்டு 30ம் தேதி புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிந்து ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். விசாரணையில் சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த ரத்தினவேல் (54), அவரது மனைவி மோகனசுந்தரி (49), குன்றத்துரை சேர்ந்த மனோகரன் (53), புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற விஏஓ சின்னராசு (எ) பழனி (73) ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்தது தெரியவந்தது. அன்னை நகர் விரிவாக்கம்-(1) என்ற பெயரில் மனைகளாக பிரித்து, பல்வேறு நபர்களுக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:
Temple land fraud Chennai couple Puduwai VAO arrested கோயில் நிலம் மோசடி சென்னை தம்பதி புதுவை விஏஓ கைதுமேலும் செய்திகள்
இந்திய ராணுவ வீரர்கள், டெல்லி அரசு ஊழியர்கள், கோடீஸ்வரர்கள் உள்பட 16.8 கோடி பேரின் தகவல்களை திருடியதாக 9 பேர் கைது
கிருஷ்ணகிரி இளைஞர் ஜெகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் சேலம் நீதிமன்றத்தில் சரண்
நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த.. 12 புதுக்கோட்டை மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!
பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது குறித்து அவதூறு வீடியோ பரப்பிய வாலிபர் சென்னையில் கைது: சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை
இந்தியா- ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டி கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்த 12 பேர் கைது: திருவல்லிக்கேணி போலீஸ் நடவடிக்கை
சென்னை புறநகர் பகுதி கடைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!