தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கி பெண்ணுக்கு கொலை மிரட்டல் அதிமுக நகர செயலாளர் கைது
2023-02-03@ 00:30:07

சத்தியமங்கலம்: தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நகர செயலாளர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி அதிமுக நகர செயலாளராக இருப்பவர் ஜி.கே.மூர்த்தி (49). இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர் மீது புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கீதா (39) என்பவர் புஞ்சை புளியம்பட்டி போலீசில் அளித்த புகாரில், கணவரை பிரிந்து கடந்த 3 ஆண்டாக மூர்த்தியுடன் குடும்பம் நடத்தி வந்தேன். எனது நடத்தை மீது சந்தேகப்பட்டு அவர் என்னை கடுமையாக தாக்கியதில் முதுகு, கழுத்து ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. மேலும் என தலை முடியை பிடித்து தெருவில் இழுத்து சென்று கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதையடுத்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் அதிமுக நகர செயலாளர் மூர்த்தியை நேற்று காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.
Tags:
Hair assault woman death threats AIADMK city secretary arrested தலைமுடி தாக்கி பெண் கொலை மிரட்டல் அதிமுக நகர செயலாளர் கைதுமேலும் செய்திகள்
இந்திய ராணுவ வீரர்கள், டெல்லி அரசு ஊழியர்கள், கோடீஸ்வரர்கள் உள்பட 16.8 கோடி பேரின் தகவல்களை திருடியதாக 9 பேர் கைது
கிருஷ்ணகிரி இளைஞர் ஜெகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் சேலம் நீதிமன்றத்தில் சரண்
நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த.. 12 புதுக்கோட்டை மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!
பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது குறித்து அவதூறு வீடியோ பரப்பிய வாலிபர் சென்னையில் கைது: சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை
இந்தியா- ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டி கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்த 12 பேர் கைது: திருவல்லிக்கேணி போலீஸ் நடவடிக்கை
சென்னை புறநகர் பகுதி கடைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!